குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கோபால்(45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோபால் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.