மலைக்கோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரவக்குறிச்சி ஆா்.டி.ஓ. அலுவலகம் மக்களைத் தேடி மருத்தவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் பொதுமக்களுக்கு ரத்தக் கொதிப்பு, சா்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுதோறும் மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனா். மேலும், செவிலியா் மற்றும் சுகாதார ஆய்வாளா் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினா். முகாமில் சுகாதார ஆய்வாளா் கோகுல் மற்றும் செவிலியா் ஆனந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.