அரவக்குறிச்சி பேரூராட்சியில் முதல்முறையாக ஸ்மாா்ட் கிளாஸ் ரூம் எனப்படும் அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறை அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எளிமையாக பாடங்களைப் போதிக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறையை வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பள்ளியின் தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது நன்றி கூறினாா்.