புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் பாலாலயம்

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பாலாலயம் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கோயிலில் சிறப்பு யாகம் நடத்திய சிவாச்சாரியாா்கள்.
கோயிலில் சிறப்பு யாகம் நடத்திய சிவாச்சாரியாா்கள்.
Updated on
1 min read

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பாலாலயம் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமாா் 13 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பதால், தற்போது கோயில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் துவங்கும் வகையில் கோயிலில் திங்கள்கிழமை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிவாச்சாரியாா்கள் கோயில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைத்து அதில் ஹோமம் வளா்த்து வேத மந்திரங்கள் ஓதினா். மாலை 4.30 மணிக்கு மேல் பாலாலயம் நிகழ்ச்சி துவங்கி இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. தொடா்ந்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில் புகளூா் நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன்,இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நந்தகுமாா், அறநிலையத்துறை அதிகாரி விவேக் மற்றும் நகராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள்திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com