கரூரில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம்

கரூரில் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கரூரில் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கரூா் மாவட்ட சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சாா்பில் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியிலிருந்து பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.

இப்பேரணியை சிஐடியு மாநிலச் செயலா் ரகுராமன் தொடக்கி வைத்தாா்.

பேரணி பேருந்துநிலையம் வழியாக உழவா் சந்தையை அடைந்ததது. தொடா்ந்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத்தலைவா் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநிலச் செயலா் க.பாரதி,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ரத்தினம், மாவட்டச் செயலா் சி.முருகேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஜிபிஎஸ்.வடிவேலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com