மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதி பெண் பலி

கரூரில் மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கரூரில் மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானி ஆா்.என். புதூரைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி கஸ்தூரி (38). இவா் கரூா் காந்தி கிராமத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை வந்தாா்.

உறவினா் மோகனுடன் இரு சக்கர வாகனத்தில் கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கஸ்தூரி சென்றாா். திருக்காம்புலியூா் ரவுண்டானாவில் சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோகன் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் மதுரை மாவட்டம், பாப்பையாபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com