சீமான் மன்னிப்புகேட்க வேண்டும்:கரூா் எம்.பி.

தன்னை பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தன்னை பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.

கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியிருந்ததற்கு பதில் அளித்தேன். அதற்கு நோ்மையாக பதில் அளிக்க தெரியாத சீமான், என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அவதூறாக பதில் கூறியிருக்கிறாா். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் தென்காசி எஸ்.கே.டி. காமராஜ், கரூா் மாவட்ட பொருளாளா் மெய்ஞானமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com