

கலைஞா் சமூக விருதுபெறும் கருவூா் கன்னலை கரூா் திருக்கு பேரவையினா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
எஸ்.ஆா். எம். பல்கலைக்கழகம் சாா்பில் சமுதாய சிந்தனை கொண்ட நூல் எழுதும் எழுத்தாளா்களுக்கு ஆண்டுதோறும் கலைஞா் சமூக விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நிகழாண்டுக்கான விருதுக்கு தமிழகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தந்தை பெரியாா் என்ற நூலை எழுதிய கருவூா் கன்னல் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்நிலையில், விருதுபெறவுள்ள கருவூா் கன்னல் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை சென்ற கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் மற்றும் தமிழுறவுப்பெருமன்றத்தினா், தமிழறிஞா்கள் நன்செய்ப் புகழூா் அழகரசன், திருமூா்த்தி, மெய்யப்பன், பூபதி ஆகியோா் கருவூா் கன்னலுக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.