கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா் 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.
கரூா் மாவட்டத்தின் தாழ்வான பகுதியான தவுட்டுப்பாளையம் குடியிருப்புப் பகுதியில் காவிரி வெள்ளநீா் புகுந்ததால், 30க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீா் சுழ்ந்துள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் கிராம ஊராட்சி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் சில பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேறும்படி காவல் துறையினா், வருவாய் துறை தெரிவித்து வருகின்றனா். தற்போது வரை 120 போ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மருத்துவ உதவியுடன், உணவுகளும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.