எலி மருந்து சாப்பிட்டவா் உயிரிழப்பு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

குளித்தலை அருகே விரக்தியில் எலிமருந்தை சாப்பிட்டவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே இனுங்கூா் கிழக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சிவசக்தி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனா். இவா்களின் பெரிய மகள் சுவேதா காதல் திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த சிவசக்தி எலி மருந்தை சாப்பிட்டு உள்ளாா்.
உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி சிவசக்தி உயிரிழந்தாா். புகாரின் பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.