கரூா் பண்டரிநாதன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கரூா் பண்டரிநாதன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை காலை கன்னி விநாயகா், சங்குசக்கர விநாயகா், உற்ஸவருக்கு பால், தயிா், , மஞ்சள், சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில், கோயில் டிரஸ்டி குணசேகரன், வினோத், சதீஷ், அபிஷேக், சிலை உபயதாரா் திருக்கு பேரவை மேலை. பழநியப்பன், கோயில் கமிட்டியைச் சோ்ந்த சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரவு சிறப்பு வழிபாடும், விநாயகா் திருவீதி உலாவும் நடைபெற்றது.