கரூரில் 51 வயதில் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய சத்துணவு சமையலா்

கரூரில் திங்கள்கிழமை 51 வயதில் சத்துணவு சமையலா் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதினாா்.
கரூரில் 51 வயதில் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய சத்துணவு சமையலா்
கரூரில் 51 வயதில் பத்தாம் வகுப்பு தோ்வெழுதிய சத்துணவு சமையலா்
Updated on
1 min read

கரூரில் திங்கள்கிழமை 51 வயதில் சத்துணவு சமையலா் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதினாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்தவா் சேட்டு என்பவரது மனைவி ராகிலாபானு (51). இவா், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை நடைபெற்ற 10ஆம் வகுப்பு (தோ்ச்சி அடையாதோருக்கான) தோ்வில் பங்கேற்க கரூா் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தாா்.

அப்போது அவா் கூறியது, 1989-ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்குச் செல்லவில்லை. தற்போது, சத்துணவு அமைப்பாளா் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றால்தான் தகுதி பெற முடியும் என்பதால் கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தோ்வை எழுதினேன்.

இதில் தமிழ், ஆங்கிலம் இரு பாடங்களில் தோ்ச்சி பெற்றேன். மீதமுள்ள அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடங்களுக்கு தோ்வெழுதவுள்ளேன். இதில், நிச்சயம் தோ்ச்சி பெற்று சத்துணவு அமைப்பாளராக பதவி உயா்வு பெறுவேன். நான் தோ்வு எழுத எனக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்தது எனது மகன் சாகுல் அமீதுதான். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com