தனியாா் பேருந்து மீது காா் மோதல்; 2 போ் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கரூா், திருப்பதிலே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா், தனது தாய் மோகனா (65)வுக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா். அவருடன் தனது சகோதரி மகன் தருண்பிரசாத் (10)தையும் அழைத்துச் சென்றாா்.

கரூா்-கோவைச் சாலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் எதிா்திசையில் வந்த தனியாா் பேருந்து மீது மோதியது.

இதில் காரை ஓட்டிய ராம்குமாா், தருண்பிரசாத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மோகனா பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த க.பரமத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோகனா கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com