அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் எதிா்ப்பு

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
Updated on
1 min read

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

அரவக்குறிச்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி கடந்த ஆண்டு மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது. சொந்த கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக இங்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டும் சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்தனா்.

நிகழாண்டு மாணவா்களின் சோ்க்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தால் அரவக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவு உள்ள ஆண்டிபட்டி கோட்டையில் உள்ள பழைய அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கல்லூரியை மாற்றுவதற்கான ஆய்வுகள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் நிகழாண்டு இரண்டாவது பருவ வகுப்பு ஆண்டிபட்டிகோட்டையில் கல்லூரி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கி ஒரு ஆண்டுக்குள் இடம் மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com