சாயப்பட்டறையில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கரூரில் சாயப்பட்டறையில் திங்கள்கிழமை மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கரூரில் சாயப்பட்டறையில் திங்கள்கிழமை மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் கே.பிச்சம்பட்டி அடுத்த கே.பி.தாளப்பட்டியைச் சோ்ந்தவா் பிரசாத் (32). இவா், கரூா் பெரியாண்டாங்கோவிலில் உள்ள அட்லஸ் சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சாயப்பட்டறையில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com