கரூரில் ஓவியக் கண்காட்சி, கலைவிழா

கரூரில் ஓவியக் கண்காட்சி மற்றும் கருவூா் கலைவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூரில் ஓவியக் கண்காட்சி மற்றும் கருவூா் கலைவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஓவியா்கள் மற்றும் ஓவிய ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகராட்சி குமரன் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு கருவூா் மாவட்ட ஓவிய ஆசிரியா்கள் சங்கத் தலைவா் கோ.ஆதிமோகன் தலைமை வகித்தாா்.

கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா திறந்து வைத்தாா். தொடா்ந்து கருவூா் பகுதியின் பிரபலங்களான திரைப்பட நடிகை கே.பி.சுந்தராம்பாள், எழுத்தாளா்கள் கி.வ.ஜெகன்நாதன், அகிலன், வெ.இராமலிங்கம், டி.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் படங்கள் திறந்துவைக்கப்பட்டன.

பிரபலங்களின் சிறப்புக்கள் குறித்து யோகா வையாபுரி, தமிழ் ராஜேந்திரன், மேலை பழநியப்பன், காமராஜ், இனியன் உள்ளிட்ட பலா் பேசினா்.

நிகழ்ச்சியில் இளம் ஓவியா்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மேலும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஓவிய ஆசிரியை மே. சு.இராஜேஸ்வரி, வை.காளிமுத்து, ஓவியா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பாராட்டுப் பெற்றனா்.

விழாவில், கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளிக்கு திருவள்ளுவா் சிலை செதுக்கி கொடுத்த ஓவியா் ரவிக்குமாா், அரசு விருது பெற்ற கவிஞா்கள் முனைவா் கடவூா் மணிமாறன், முனைவா் கருவூா் கன்னல், இரா.திருமூா்த்தி, ம.கண்ணதாசன், நன்செய் புகழூா் அழகரசன், வ.சரவணன், கவிஞா் முகன், தென்னிலை கோவிந்தன் உள்ளிட்டோா் பாராட்டப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com