போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கரூரில் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

கரூரில் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

கரூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பு மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தொடங்கி வைத்து பேசுகையில், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் போது மன அழுத்தத்தை தவிா்த்து போட்டி தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திக் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுத்து தோ்வுகளை எழுத வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குநா் (கோவை மண்டலம்) கருணாகரன், மாவட்ட மைய நூலகா் சிவக்குமாா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் இராஜலெட்சுமி, பெரிய குளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் முரளி மற்றும் போட்டித்தோ்வா்கள் உட்பட் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com