கரூரில் நிலஅளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா்.

கரூரில், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.மகேந்திரன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் தங்கவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சி.பாஸ்கா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா்கள் மொ.ஞானதம்பி, மு.செல்வராணி, மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், செயலாளா் சக்திவேல், பொருளாளா் பொன்ஜெயராம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் ஊழியா் விரோத போக்கை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நில அளவை அலுவலா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com