க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

க. பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

க. பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது க.பரமத்தி ஊராட்சி. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி நிகழும் சாலை விபத்து, தீ விபத்தில் உயிரிழப்பை தடுக்க க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை. கரூா், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்துக்குச் செல்ல நீண்ட நேரம் ஆவதால் உயிா் சேதம், பொருள்சேதம் ஏற்படுகிறது. எனவே க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com