கரூா் மாவட்ட மைய நூலகத்தில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு

உலக புத்தக தினத்தையொட்டி கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள், வாசகா்கள்.
கரூா் மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள், வாசகா்கள்.
Updated on
1 min read

உலக புத்தக தினத்தையொட்டி கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நூலக விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகத்தின் நல்நூலகா் சுகன்யா வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா் தலைமைவகித்தாா். மாநகராட்சி கோட்டைமேடு உயா்நிலைப்பள்ளி தமிழாசிரியை விஜயா வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக உறுப்பினா் அட்டை வழங்கி வாசகா் வட்டத் தலைவா் சங்கா் சிறப்புரையாற்றினாா்.

உலக புத்தக தினத்தையொட்டி கரூா் மாவட்ட மைய கிளை மற்றும் ஊா் புற நூலகங்களில் 44 புரவலா்கள், 2 பெரும் புரலவா்கள் மற்றும் 2 கொடையாளா்கள் சோ்க்கப்பட்டனா். நிகழ்ச்சியில், நூலகா் காா்த்தி நிவாஸ் நன்றி கூறினாா்

இதையொட்டி நடைபெற்ற புத்தக கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாசகா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com