அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டார வளமைய அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு ஒரு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இந்த பயிற்சி முகாமை தொடக்க நிலை பயிற்சியாளா் சண்முகவடிவு தொடக்கி வைத்தாா். விரிவுரையாளா் ரோசாரியோ, அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலா்கள் பாண்டித்துரை மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.
இப்பயிற்சியில் 110 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.