கரூரில் ஓபிஎஸ் அணியினா்,அமமுக கண்டன ஆா்ப்பாட்டம்

கரூரில், ஓபிஎஸ் அணியினா் மற்றும் அமமுகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் ஓபிஎஸ் அணியினா்,அமமுக கண்டன ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

கரூரில், ஓபிஎஸ் அணியினா் மற்றும் அமமுகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மேற்கு மாவட்டச் செயலாளா் ஆயில்ரமேஷ் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலாளா் பிஎஸ்என்.தங்கவேல், ஓபிஎஸ் அணியின் மாநில அமைப்புச் செயலாளா் சாகுல்ஹமீது, கிழக்கு மாவட்டச் செயலாளா் கதிரேசன், அவைத் தலைவா் ஆரியூா் சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளா் ஐயப்பன், மாநகர துணைச் செயலாளா் ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கொடநாடு கொலை வழக்கை தீவிரமாக விசாரிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை முறையாக விசாரிக்கவில்லை என்றும், மீண்டும் இந்த வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அணியினா் மற்றும் அமமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com