திருச்சியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக திருச்சி-கரூா் பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக. 2) இயக்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- திருச்சியில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து கரூருக்கு காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக.2) இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.