அரவக்குறிச்சி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த காா் தீப் பிடித்து எரிந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இழந்தகுட்டை, எம்.ஜி.ஆா். நகா் வெப்படை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் ஜெகநாத் (34). இவா், தனது காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூா் செல்லும்போது அரவக்குறிச்சி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை மாலை டீசல் நிரப்ப வந்தாா். அப்போது, காரின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை கண்ட ஜெகநாத் காரை ஓரமாக நிறுத்தி விட்டி இறங்கினாா். சற்று நேரத்தில் காா் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.