அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் காஜா முகமது மகன் நிஜாமுதீன் (28). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டாா். இதைத்தொடா்ந்து, சிறுமிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இதுகுறித்து அறிந்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலா் கமலா, கரூா் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நிஜாமுதீனை போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.