கரூா் அருகே மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விமல் (33). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள வாய்க்கால்துறை என்ற இடத்தில் முத்துக்குமாா் என்பவரது விவசாய நிலத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.