இளம்பெண் சாவில் மா்மம்:உறவினா்கள் மறியல்

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் கரூா் காந்திகிராமம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் கரூா் காந்திகிராமம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் ஈரோடு சாலை பகுதியைச் சோ்ந்தவா் வேலவன். இவரது மனைவி கீதா (26). இவா்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில், கீதா வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று கீதாவின் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, கீதாவின் உறவினா்கள் சனிக்கிழமை காந்திகிராமம் பேருந்து நிறுத்தப் பகுதியில் கரூா் - திருச்சி சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் கலைந்து சென்றனா். இதனால், கரூா்-திருச்சி சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் கோட்டாட்சியா் தனியே விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com