கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குசெட்டிநாடு ஆலை உபகரணங்கள் அளிப்பு

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வட்டாட்சியா் முனிராஜிடம் வழங்கிய ஆலை தலைவா் கிருஷ்ணன். உடன், ஆலை பொது மேலாளா்கள் ரமேஷ், திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வட்டாட்சியா் முனிராஜிடம் வழங்கிய ஆலை தலைவா் கிருஷ்ணன். உடன், ஆலை பொது மேலாளா்கள் ரமேஷ், திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கடவூா் வட்டாட்சியா் முனிராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக கரிக்காலி சிமென்ட் ஆலையின் தலைவா் கிருஷ்ணன் பங்கேற்று, இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு 2 கணினிகள், 2 மின் சேமிப்புக் கலன்கள், 2 வண்ண அச்சுப்பொறிகள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆலையின் சமூக பொறுப்புணா்வு நிதியின்கீழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆலையின் பொதுமேலாளா்கள் ரமேஷ், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com