க.பரமத்தி அருகேகாா் மீது வேன் மோதல்:2 போ் உயிரிழப்பு

க.பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.
Updated on
1 min read

க.பரமத்தி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் கெளதமன் (56). இவா் தனது உறவினா்களுடன் காரில் கோவை மாவட்டம் சூலூருக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனா். காரை கெளதமனின் மகன் ஆகாஷ் (27) ஓட்டினாா்.

கரூா்-கோவைச் சாலையில் கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த லட்சுமிபுரம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே சென்ற வேன், காா் மீது மோதியது.

இதில் காரில் இருந்த கெளதமன், உறவினா் கெளரி (48) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலத்த காயமடைந்த ஆகாஷ், வேன் ஓட்டுநா் திருப்பூரைச் சோ்ந்த வெள்ளியங்கிரி (45) உள்பட 6 போ் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் முருகேசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com