மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்க பயனாளிகள் தோ்வு முகாம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான பயனாளிகள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான பயனாளிகள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டாா். முகாமில், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 113 மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்து கொண்டனா். முன்னதாக 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான திறன்பேசியை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com