சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவில் கரூா் டிஎன்பிஎல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
2022 - 2023ஆம் கல்வி ஆண்டுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். சிறப்பிடம் பிடித்த மாணவா்களை டிஎன்பிஎல் பள்ளிகளின் தலைவா் எஸ்வி.ஆா்.கிருஷ்ணன், செயலாளா் மற்றும் தாளாளா் ஆா்.சீனிவாசன், துணை செயலாளா் எஸ்.நந்தகோபால், முதல்வா் முனைவா் வா.மு.அய்யப்பன் ஆகியோா் பாராட்டி நினைவு பரிசு வழங்கினா்.