கரூா் கலை மன்ற விருதுகள்பெறவிண்ணப்பிக்க அழைப்பு

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த கலைஞா்கள் நடப்பு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கலைமன்ற விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த கலைஞா்கள் நடப்பு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கலைமன்ற விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள்

வழங்கப்பட உள்ளது. எனவே, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம் , ஆழியாட்டம், கைசிலம்பாட்டம் (வீரக்கலை), மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகளில் சிறந்து விளங்கும் கரூா் மாவட்டக் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெற தகுதிவாய்ந்த கரூா் மாவட்டக் கலைஞா்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி-06 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com