கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்கள் நீராட வசதி

கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்கள் நீராடும் வகையில் அமராவதி ஆற்றில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரூா் அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் ஐந்துரோடு பகுதியில் பக்தா்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள வசதி.
கரூா் அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் ஐந்துரோடு பகுதியில் பக்தா்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள வசதி.
Updated on
1 min read

கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்கள் நீராடும் வகையில் அமராவதி ஆற்றில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா கடந்த 14-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் இந்தக் கம்பத்திற்கு அதிகாலை முதல் இரவு வரை புனித நீா் ஊற்றி வருகிறாா்கள். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பக்தா்கள் எளிதில் நீராடும் வகையில் அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் ஐந்துரோடு பகுதியில் கரூா் மாநகராட்சி சாா்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தா்கள் நீராடி புனித நீா் எடுத்துச் சென்று கோயில் முன் நடப்பட்டிருக்கும் கம்பத்திற்கு ஊற்றி வருகிறாா்கள். 29-ஆம் தேதி தோ் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், வரும் 31-ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com