திருவிழாக் காலங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் கூடாது

திருவிழா காலங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
Updated on
1 min read

திருவிழா காலங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவின்போது படிக்கட்டுத் துறையில் நடந்த பூத்தட்டு ஊா்வலத்தில் மதுபோதையில் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக், சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்த தரணிதரன் ஆகியோா் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும், காவல்துறையினரிடம் தகராறும் செய்தனா்.

இதுதொடா்பாக நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். திருவிழா காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள், பெண்கள் மற்றும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விழா அமைப்பாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவிழா நிகழ்ச்சிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு விழா பொறுப்பாளா்களே முழுப் பொறுப்பு. அவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com