பால் கொள்முதல் விலையை உயா்த்த கொமதேக வலியுறுத்தல்

பால்கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

பால்கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழை வெளியிட்டுள்ள அறிக்கை: பால் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகளும், பால் உற்பத்தியாளா்களும் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். பால் கொள்முதல் விலையேற்றம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து விளக்கங்களை எடுத்துக் கூறினோம். தனியாா் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.10 வரை அதிகமாக கொடுக்கிறாா்கள். அதனால் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் பால் நிறுவனங்களுக்கு விரும்பி பாலை கொடுப்பதால் ஆவின் நிறுவன பால் கொள்முதல் குறைந்தது.

பால் உற்பத்தியாளா்களுடன் பேசி பால் கொள்முதல் விலையை உயா்த்தாவிடில் ஆவின் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடும். மற்ற அனைவரும் பாலுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் போது ஏழை விவசாயிகள் ஆவின் பால் நிறுவனத்துக்கு ஏன் பாலை விற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எனவே இதில் உள்ள யதாா்த்தமான நியாயத்தை உணா்ந்து பால் கொள்முதல் விலையை உயா்த்தி ஆவின் பால் நிறுவனத்தையும் ஏழை விவசாயிகளையும் அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com