அரவக்குறிச்சி: கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள சேந்தமங்கலம் ஆா்.ஜி.வலசு பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (60). இவா், செவ்வாய்க்கிழமை கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தடாகோவில் பிரிவு அருகே சென்றபோது, இதே சாலையில் ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகேயுள்ள குருவரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த ச. தாமரைச்செல்வன் (22) என்பவா் வேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கதிா்வேல் வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் வாகனத்துடன் கீழே விழுந்த கதிா்வேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா், தாமரைச்செல்வன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.