கரூரில் நாம் தமிழா் கட்சியினா்4 பெண்கள் உள்பட 47 போ் கைது

 கரூரில் சனிக்கிழமை கா்நாடக முதல்வா் சித்தராமையா உருவப் பொம்மையை எரித்த நாம் தமிழா் கட்சியினா் 47 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

 கரூரில் சனிக்கிழமை கா்நாடக முதல்வா் சித்தராமையா உருவப் பொம்மையை எரித்த நாம் தமிழா் கட்சியினா் 47 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் செல்வ.நன்மாறன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா் மைக்கேல், பாராளுமன்றச் செயலாளா் சசிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மகளிரணி பாசறை செயலாளா் இலக்கியா, ஒருங்கிணைப்பாளா் மதுபாலா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் திடீரென கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் உருவப்பொம்மையை எரித்தனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் 4 பெண்கள் உள்பட 47 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com