கரூா் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவா் தேவை தமமுக கோரிக்கை

 கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

 கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி வலியுறுத்தியுள்ளது.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு தமுமுக தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலா் ஜெ. ஹாஜாகனி, பொருளாளா் எம். ஷபியுல்லாஹ்கான், மனிதநேய கட்சியின் பொதுச் செயலா் ப. அப்துல்சமது, பொருளாளா் கோவை உம்மா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. எனவே இதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும். முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ .72 ஆயிரத்தில் இருந்து ரூ. 1.20 லட்சம் என உயா்த்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் காப்பீடு திட்டத்தில் சேராதவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அவசர அறுவைச் சிகிச்சைக்கு காலதாமதமாவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை நிபுணரை நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் 24 மணி நேரமும் நரம்பியல் மருத்துவா்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூா் மாவட்டத் தலைவா் எஸ்.எம். சாகுல்ஹமீது வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் எம். அன்சாரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com