கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்ற இளம்பெண் தவறிவிழுந்து இறந்தாா்.
கரூா் மாவட்டம், காணியாளம்பட்டியை அடுத்த சின்னதேவன்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் மனைவி உமாமகேஸ்வரி (21). சனிக்கிழமை இரவு இவா் கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் காணியாளம்பட்டி அரசு மாணவா் விடுதி அருகே சென்றபோது தவறி விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.