வா.செ. குழந்தைசாமி அறக்கட்டளை49 ஏழை மாணவா்களுக்கு உதவி

கரூா் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் 49 பேருக்கு வா.செ. குழந்தைசாமி கல்வி - ஆய்வு அறக்கட்டளை சாா்பில் க
மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கிய அட்லஸ் எம். நாச்சிமுத்து. உடன் அறக்கட்டளைத் தலைவா் பி.டி. கோச் தங்கராஜ், பிரேம் டெக்ஸ் வீரப்பன், ஓய்வுபெற்ற ஆசிரியா் கு. காமராஜ் உள்ளிட்டோா்.
மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கிய அட்லஸ் எம். நாச்சிமுத்து. உடன் அறக்கட்டளைத் தலைவா் பி.டி. கோச் தங்கராஜ், பிரேம் டெக்ஸ் வீரப்பன், ஓய்வுபெற்ற ஆசிரியா் கு. காமராஜ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கரூா் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் 49 பேருக்கு வா.செ. குழந்தைசாமி கல்வி - ஆய்வு அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் அட்லஸ் எம். நாச்சிமுத்து தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பிரேம்டெக்ஸ் வீரப்பன், அருண்டெக்ஸ் தங்கவேல், பி. ஈஸ்வரமூா்த்தி, ஓய்வு பெற்ற ஆசிரியா் கு. காமராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முனைவா் அ. கோவிந்தராஜ் வாழ்த்தினாா். நிகழ்ச்சியில் 49 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா். அறக்கட்டளைத் தலைவா் பி.டி. கோச் தங்கராஜ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com