கரூா் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

க.பரமத்தி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் த.பிரபுங்கா் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டாா்.
கரூா் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
Updated on
1 min read

கரூா்: கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், க.பரமத்தி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் த.பிரபுங்கா் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்டாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ முன்னிலை வகித்தாா். க.பரமத்தி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலெட்சுமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக பொதுமக்களுக்கு கிராம சபை தொடா்பாக விழிப்புணா்வு குறும்படம் ஒளிப்பரப்பப் பட்டது.

பின்னா் க.பரமத்தி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களின் சேவைகளை பாராட்டி சீருடை மற்றும் பரிசுகளை வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com