நில அளவை அலுவலா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு அமைப்பினா் வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலா்கள்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலா்கள்.
Updated on
1 min read

கரூரில், தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு அமைப்பினா் வியாழக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு.மகேந்திரன் தலைமை வகித்தாா்.கோட்டத் தலைவா் தங்கவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் பாஸ்கா் ஆா்ப்பாட்டத்தை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.எஸ்.அன்பழகன், செயலாளா் பொன்.ஜெயராம் உள்ளிட்டோா் பேசினா்.

நில அளவைத்துறையில் காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட நிரந்தர பணியாளா்களுக்கான புல உதவியாளா் பணியிடங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நில அளவை அலுவலா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com