தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி தேரோட்ட விழா கொடியேற்றம்

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்ட விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கரூா் மாவட்டம், தாந்தோன்றி கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கொடியேற்றிய பட்டாச்சாரியாா்கள்.
கரூா் மாவட்டம், தாந்தோன்றி கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கொடியேற்றிய பட்டாச்சாரியாா்கள்.
Updated on
1 min read

கரூா்: தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்ட விழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென் திருப்பதி என்றழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயில் புரட்டாசி மாத தேரோட்ட விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக

அதிகாலையில் கல்யாண வெங்கடரமணசுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் பட்டாச்சாரியாா்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா நடைபெறும். செப். 24-ஆம்தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 26-ஆம்தேதி புரட்டாசி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து அக்.9-ஆம்தேதியுடன் விழா முடிவடைகிறது.

அன்னதானத்துக்கு கட்டுப்பாடு-பாஜக கண்டனம்: தேரோட்டத்தின்போது அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்பு சான்று பெற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளதற்கு பாஜக மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com