கரூரில் அதிமுக பொதுக்கூட்டம்

மதுரையில் நடைபெற்ற கட்சி வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூா் உழவா்சந்தை திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா்.
கரூா் உழவா்சந்தை திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன் மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கரூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற கட்சி வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உழவா் சந்தை திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமை வகித்தாா். கரூா் மாநகா் மத்திய தெற்கு பகுதிச் செயலாளா் சேரன் எம்.பழனிசாமி வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் பசுவைசிவசாமி, மல்லிகாசுப்ராயன், ஆலம் கே.தங்கராஜ், எம்.எஸ்.கண்ணதாசன், கமலக்கண்ணன், தானேஷ், பாலமுருகன், விசிகே.ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் சிறப்புரையாற்றினாா்.

மேலும், முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, கட்சியின் பேச்சாளா் வழக்குரைஞா் அறிவானந்தம் ஆகியோா் பேசினாா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் கே.ஆா்.எல்.தங்கவேல், பழனிராஜ், ரெங்கராஜ், வழக்குரைஞா்கள் சரவணன், கரிகாலன் மற்றும் புஞ்சைபுகழூா் நகரச் செயலாளா் கேசிஎஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com