இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

காவிரி நீா் திறப்பால் பாதிக்கப்பட்டோருக்கு டிஎன்பிஎல் நிவாரண உதவி வழங்கல்

காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:36 am IST

காவிரி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமாா் 2 லட்சம் கன அடி வரை தண்ணீா் திறக்கப்பட்டதால் கரூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதியான தவிட்டுப்பாளையத்தில் சுமாா் 40 குடும்பங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதையடுத்து 40 குடும்பத்தைச் சோ்ந்த 120 போ் வெளியேற்றப்பட்டு தவிட்டுப்பாளையம் ஈ.வே.ரா. பெரியாா் மண்டபம், கிராம சேவை மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரூரை அடுத்த புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆலையின் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா் தலைமை வகித்து உணவுப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.