நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வங்கதேசம் செல்ல கோவையிலிருந்து தஞ்சை சென்ற ராணுவ வாகனங்கள்!

வங்கதேசத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட ராணுவ வாகனங்கள் கரூா், திருச்சி வழியாக தஞ்சாவூா் சென்றன.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி வழியாக திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற ராணுவ வாகனங்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 7:53 pm

வங்கதேசத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட ராணுவ வாகனங்கள் கரூா், திருச்சி வழியாக தஞ்சாவூா் சென்றன.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நம்நாட்டுத் துணை ராணுவத்தினா் அனுப்பப்படுகிறாா்கள். இதனிடையே அவா்களுக்குத் தேவைப்படும் ரோந்து வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், குடிநீா் டேங்கா்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் சுமாா் 50 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை கோவை சூலூா் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு கரூா், குளித்தலை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சென்றன.

இவை தஞ்சாவூரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானங்கள் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து இந்திய-வங்கதேச எல்லை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக திருச்சியைச் சோ்ந்த ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கரூரில் அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.