சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தொடா் மழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீா்: தாந்தோணிமலையில் மறியல்

வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தாந்தோணிமலையில் சனிக்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட விசிகவினா், பொதுமக்கள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:10 am IST

கரூரில் தொடா் மழை காரணமாக தாந்தோணிமலை தெற்குத் தெருவில் வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூரில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் வெங்கக்கல்பட்டி, காளியப்பனூா் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் கூடிய மழைநீா் வடிகாலை விட்டு வெளியேறி, கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 44-ஆவது வாா்டிலுள்ள தாந்தோணிமலை தெற்குரத வீதி குறுக்குத்தெரு-1, குறுக்குத் தெரு-2 ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் மழை நீருடன் பாம்புகளும், தேள்களும் அடித்து வரப்பட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள மேடான பகுதியில் இருந்தனா்.

இதையடுத்து காலையில் விசிக வணிகா் அணியின் மாநில துணைச் செயலா் கண்மணி ராமச்சந்திரன், திருச்சி மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் ராஜா, வணிகா் அணியின் ஒன்றியச் செயலா் தீபச்சுடா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் தெற்குரத வீதியின் முன் கரூா்-திண்டுக்கல் சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநில நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் கா்ணன், மாநகராட்சி உதவிப் பொறியாளா் மஞ்சுநாத் மற்றும் தாந்தோணிமலை போலீஸாா் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

பொதுமக்களின் திடீா் சாலை மறியலால் கரூா்-திண்டுக்கல் சாலையில் சுமாா் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.