கரூரில் தொடா் மழை காரணமாக தாந்தோணிமலை தெற்குத் தெருவில் வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூரில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் வெங்கக்கல்பட்டி, காளியப்பனூா் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன் கூடிய மழைநீா் வடிகாலை விட்டு வெளியேறி, கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 44-ஆவது வாா்டிலுள்ள தாந்தோணிமலை தெற்குரத வீதி குறுக்குத்தெரு-1, குறுக்குத் தெரு-2 ஆகிய பகுதிகளில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
மேலும் மழை நீருடன் பாம்புகளும், தேள்களும் அடித்து வரப்பட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள மேடான பகுதியில் இருந்தனா்.
இதையடுத்து காலையில் விசிக வணிகா் அணியின் மாநில துணைச் செயலா் கண்மணி ராமச்சந்திரன், திருச்சி மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் ராஜா, வணிகா் அணியின் ஒன்றியச் செயலா் தீபச்சுடா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் தெற்குரத வீதியின் முன் கரூா்-திண்டுக்கல் சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாநில நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் கா்ணன், மாநகராட்சி உதவிப் பொறியாளா் மஞ்சுநாத் மற்றும் தாந்தோணிமலை போலீஸாா் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.
பொதுமக்களின் திடீா் சாலை மறியலால் கரூா்-திண்டுக்கல் சாலையில் சுமாா் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

