புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் திங்கள்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 10:19 pm

Din

கரூா்: கரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் திங்கள்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாரக்கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளா் காக்ஸ்டன் ஜெரால்டு டைட்டஸ் தலைமை வகித்தாா். செயலாளா் மேகநாதன், மாவட்டத் தலைவா் ராஜா, துணைச் செயலாளா் அருள்குழந்தை தேவதாஸ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு எதிரான அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயா்வு தொடா்பான நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகே பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.