திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Updated On :26 ஜூன் 2024, 5:58 am IST

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

நாமக்கல்லைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரிடம் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கிய வழக்கில் தனது பெயா் சோ்க்கப்படலாம் எனக்கருதி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.