4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக அரசைக் கண்டித்து கரூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து கரூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:29 am

Din

கரூரில் திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா்கள் அரவை முத்து, சிவம் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் முருகன் சுப்பையா, புறநகா் மாவட்ட அவைத் தலைவா் ரங்கநாதன், பொருளாளா் ராஜசேகரன், துணைச் செயலாளா்கள் பெரியண்ணன், பழனிவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளா் வழக்குரைஞா் மாலதி வினோத் கண்டன உரையாற்றினாா். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்துக்கு தமிழக முதல்வா் பொறுப்பேற்க வேண்டும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பழனிவேல், பஞ்சப்பட்டி சுப்பிரமணி, கலையரசன் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.